| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு Sports

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி..! தமிழ்நாடு அசத்தல் வெற்றி...!

by Vignesh Perumal on | 2025-05-05 07:00 PM

Share:


தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி..! தமிழ்நாடு அசத்தல் வெற்றி...!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பெஸ்ட் ஷூட்டர் சூட்டிங் அகடமியில் மே 2 முதல் 4 வரை நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் மாணவர்கள் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் பயிற்சியாளர் இரா.குணசேகரன் தலைமையில் இந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரா.தர்ஷன் ராஜ் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அதேபோல், சீனியர் பிரிவில் (21 முதல் 50 வயது வரை) ஆர்.குணசேகரன் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் பிஸ்டல் போட்டியில் கொரடாச்சேரி அருகே வாழச்சேரியில் உள்ள மதர் இந்தியா பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன் எஸ்.எம்.சரண் வெள்ளிப்பதக்கமும், இதே பிரிவில் ஏர் ரைபிள் போட்டியில் திருவாரூர் அருகே எட்டியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன் கே.ஸ்ரீவரதா வெண்கல பதக்கமும் வென்று திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டிய பயிற்சியாளர் இரா.குணசேகரன் கூறுகையில், "தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாட்டியாலா வாட் பிரதிநிதி மிஸ் குல்பீர் கவுர் நேரில் சந்தித்து தனது இல்லத்திற்கு அழைத்து பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். மேலும், மாணவர்கள் விளையாட்டுடன் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும், இந்திய நாட்டிற்காக பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

மேலும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து மாணவர்கள் வெற்றி பெற்றதை அறிந்த இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளரும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவருமான டாக்டர் ஆர்.ரமேஷ், இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் வழக்கறிஞர் பிரீத்தி பாண்டியா, செயல் தலைவர் டாக்டர் எம்.செல்வராஜ், பொதுச்செயலாளர் டாக்டர் கே.திருநாவுக்கரசு, ஹரியானா தேசிய பொதுச்செயலாளர் பூப்பால் சிங், ஒரிசா பொதுச்செயலாளர் பார்த்தசாரதி முகியா ஆகியோர் டெல்லியில் நேரில் சந்தித்து மாணவர்களை வாழ்த்தி பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாய பூமியான டெல்டா மாவட்டத்திலிருந்து வந்து திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இரா.குணசேகரன் குறிப்பிட்டார். வெற்றி பெற்று திருவாரூர் திரும்பிய மாணவர்களுக்கு பயிற்சி மையத்தின் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment