by Vignesh Perumal on | 2025-05-05 01:32 PM
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில், காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசிய குழு உறுப்பினர் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்தார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள், பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காஷ்மீரில் தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் ஹெச். ராஜா தெரிவித்தார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!