by Vignesh Perumal on | 2025-05-05 01:32 PM
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில், காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசிய குழு உறுப்பினர் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்தார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள், பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காஷ்மீரில் தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் ஹெச். ராஜா தெரிவித்தார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!