by Satheesh on | 2025-04-30 05:25 PM
கன்னியாகுமரி : நாகர்கோவில் ஸ்காட் பள்ளி சாலையில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது பஸ் ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் பிளாட்பாரத்தில் நின்ற மோட்டார் சைக்கிள்களை இடித்ததால் சம்பந்தப்பட்ட பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் போலீசார் சோதனை செய்ததில் பஸ் டிரைவர் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக பஸ்சையும் ஓட்டி வந்த டிரைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து இது போல் நடைபெற்று வருகிறது. எனவே, தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பை கருதி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.