| | | | | | | | | | | | | | | | | | |
இராணுவம் ராணுவம்

6 வது துப்பாக்கி சூடு...! பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்...!

by Vignesh Perumal on | 2025-04-30 01:10 PM

Share:


6 வது துப்பாக்கி சூடு...! பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்...!

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆறாவது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இன்று (ஏப்ரல் 30, 2025) எல்லைப்பகுதியில் உள்ள சில இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தொடர்ச்சியான அத்துமீறல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறல்கள் குறித்து இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வாய்ப்புள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment