by Vignesh Perumal on | 2025-04-29 09:54 PM
கனடா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி, தனது முதல் உரையில் அமெரிக்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"அமெரிக்கா இழைத்த துரோகத்தின் படிப்பினைகளை மறக்க மாட்டோம். கனடாவை சொந்தமாக்கும் நோக்கத்துடன் நம்மை உடைக்க டிரம்ப் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது" என்று அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.
கனடா தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் அவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் ஆற்றிய முதல் உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது உரையில், "அமெரிக்கா கனடாவை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. டொனால்ட் டிரம்ப் கனடாவின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி, நாட்டை உடைக்க முயற்சிக்கிறார். ஆனால், கனடாவின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது. கனடா எப்போதும் சுதந்திர நாடாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், "கனடா மக்கள் அமெரிக்காவின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். கனடாவின் வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால், கனடா மக்கள் தங்கள் நாட்டின் வளங்களை பாதுகாப்பார்கள். அமெரிக்காவின் சூழ்ச்சிகளை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.
மார்க் கார்னியின் இந்த பேச்சு, கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடா மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகளை தூண்டும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!