by admin on | 2025-01-31 06:21 PM
கன்னியாகுமரி:நாகர்கோவில் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்கச் செயின் பறிப்பு.
திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த லீலாவதி(70) என்ற மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க செயின் வெள்ளமடம் பகுதியில் வரும் போது ஓடும் பேருந்தில் வைத்து மாயம்- உடன் பயணம் செய்த பயணி நகையை திருடி சென்றது அம்பலம்- மேலும் ஓட்டுனர் நடத்துனர் பேருந்தை வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் முன்னிலையில் பயணிகளிடம் உடமைகளை சோதனை செய்ததால் பரபரப்பு- ஏற்பட்டது. அரசு பேருந்துகளில் தொடர் கைவரிசை காட்டும் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருட்டை தடுக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி