by admin on | 2025-01-31 11:42 AM
நீலகிரியின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடத்துநராக பணியாற்றிய சுகன்யாவின் கணவர் கருப்பசாமி 2023ம் ஆண்டு பணியின்போது உயிரிழந்தார்.
கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க சுகன்யா கோரிக்கை வைத்திருந்த நிலையில், அடுத்த ஓராண்டுக்குள் நடத்துநர் பணி வழங்கி உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அதன்படி, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் வழி மார்க்கமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தின் நடத்துநராக இன்று முதல் பணியைத் தொடங்கியுள்ளார்.