by Vignesh Perumal on | 2025-04-25 02:11 PM
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காக்காதோப்பூர் பிரிவில் இன்று அன்பரசன் என்பவர் பெங்களூரில் இருந்து மதுரையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில், மதுரையிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று திடீரென உள்ளே நுழைந்தது.
இதில் எதிர்பாராத விதமாக கார் அரசு பேருந்தின் மீது மோதியதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த அன்பரசன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம் விபத்து குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், காயமடைந்த இருவரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!