by admin on | 2025-01-31 10:33 AM
கன்னியாகுமரி : நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் சண்டைநடந்த நிலையில், நேற்று, ஆசாரிபள்ளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசிமேனகா கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உடையாடினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் ஒழுக்கத்தோடு நடக்க வேண்டும் என்றும் ,
மேலும், இளைஞர்கள் நன்றாக படித்து, எந்த வித போதை பழக்கங்களுக்கும் அடிமையாகமல், நல்லிணக்கத்துடன், நல்ல வேலைக்கு செல்லசெல்ல வேண்டும் எனவும், குடும்பத்தை பார்க்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார் மேலும், இளைஞர்கள் யாரும் போதைப் பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் போதை பொருளுக்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் நல்ல பாதைகளை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய போது
இது மாதிரியான சம்பவம் நடக்காத வண்ணம் இருக்க வேண்டும் மீறி நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!