by Vignesh Perumal on | 2025-04-24 01:14 PM
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று (ஏப்ரல் 24, 2025) கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தூதரகத்திற்கு ஒருவர் கேக்குடன் சென்றதால் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.
பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒருவர் கையில் கேக் பெட்டியுடன் சென்றதை கண்ட செய்தியாளர்கள், அது கொண்டாட்டத்திற்காக கொண்டு செல்லப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். "கொண்டாட்டத்திற்காக கேக் கொண்டு செல்லப்படுகிறதா?" என்று செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டபோதும், அந்த நபர் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக உள்ளே சென்றார்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாத முகாம்கள் இருப்பதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டது போன்ற பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடு குறித்த தகவல் ஊடகங்களில் வெளியானது. இதன் காரணமாகவே செய்தியாளர்கள் அதிக அளவில் தூதரகத்தை முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர்.
எனினும், தூதரகத்தில் என்ன கொண்டாட்டம் நடைபெறுகிறது அல்லது கேக் எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த நபர் பதில் ஏதும் கூறாமல் சென்றதால், பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவும்போது, பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டம் நடைபெறுவது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!