by Vignesh Perumal on | 2025-04-24 10:42 AM
திண்டுக்கல் மாவட்டம், ஜம்புலிம்பட்டி அருகே நாகம்மாள் கோவில் பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோம்பையன்பட்டியைச் சேர்ந்த ஆரோன் என்பவர் நேற்று முன்தினம் நாகம்மாள் கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் ஆரோன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து எப்படி நடந்தது, யார் காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆரோனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கு அப்பகுதி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!