| | | | | | | | | | | | | | | | | | |
இராணுவம் ராணுவம்

"உளவு பிரிவு அதிகாரிகள் கொல்லப்படவில்லை"...!பாதுகாப்புத் துறை விளக்கம்.....!

by Vignesh Perumal on | 2025-04-23 03:35 PM

Share:


"உளவு பிரிவு அதிகாரிகள் கொல்லப்படவில்லை"...!பாதுகாப்புத் துறை விளக்கம்.....!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உளவு பிரிவை (Intelligence Bureau - IB) சேர்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை பாதுகாப்புத் துறை மறுத்துள்ளது.

பயங்கரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், பாதுகாப்புத் துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மணிஷ் ரஞ்சன் என்ற உளவுத் துறை அதிகாரி மட்டுமே உயிரிழந்துள்ளார். மற்ற உளவுத் துறை அதிகாரிகள் யாரும் கொல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உளவு பிரிவைச் சேர்ந்த மேலும் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்புத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் அளிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment