| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டோருக்காக மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

by aadhavan on | 2025-04-23 10:52 AM

Share:


காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டோருக்காக மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

விளக்கு ஏந்தி அஞ்சலி

• சி.எம்.ஆதவன்

சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25க்கும் மேற்பட்டோரின் ஆத்மா சாந்தி அடையவும், இதுபோல நிகழ்வு நடைபெறாமல் இருக்கவும் மதுரையில் திருவிளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எஸ்.எஸ்.காலனியில் உள்ள மகாபெரியவா கோயிலில்
அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
 
மருத்துவர் சுவாமிநாதன், செவிலியர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டு, பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு கூறும் போது,  "மனித உயிர் விலை மதிக்க முடியாதது. இனி இது போன்ற நிகழ்வு நடைப்பெறாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது" என்றார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment