by Vignesh Perumal on | 2025-04-23 10:14 AM
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி சிவசக்தி (வயது 23). இவருக்கு கடந்த 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில், கடந்த 20-ம் தேதி குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது.
குழந்தை இறந்தவுடன், பெற்றோர் குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். ஆரோக்கியமாக இருந்த குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வினோத் அளித்த புகாரின் பேரில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23) தாசில்தார் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவக் குழுவினரின் தலைமையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!