| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம்...! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...!

by Vignesh Perumal on | 2025-04-22 05:02 PM

Share:


பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம்...! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உதகையில் நடைபெற உள்ளது என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த இரண்டு நாள் மாநாட்டை வரும் 25-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநரை வேந்தர் என்று குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு (Artificial Intelligence - AI Usage), பல்கலைக்கழகங்களின் நிதி மேலாண்மை (Financial Management) உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன. உயர்கல்வித் துறையில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம் மற்றும் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துணைவேந்தர்கள் கூட்டம், தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக அமையும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment