by Vignesh Perumal on | 2025-04-22 04:40 PM
2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 22, 2025) வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை கணிசமான எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிலையில், கூடுதலாக 50,000 புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு மேலும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் பயனாளிகள் தேர்வு குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!