by Vignesh Perumal on | 2025-04-22 11:04 AM
ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு "நோ ஒர்க் நோ பே" (No Work No Pay) என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் கடை பணியாளர்களின் முழு விவரங்களையும் உடனடியாக பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். தற்காலிக ஊழியர்களை நியமிப்பது அல்லது வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் விரல் ரேகை பதிவு முறை, ஆதார் அடிப்படையிலான பொருட்கள் விநியோகத்தில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கூட்டுறவு சங்க பதிவாளரின் இந்த உத்தரவு போராட்டக்காரர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !