by Vignesh Perumal on | 2025-04-22 10:48 AM
சென்னையில் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் திட்டமிட்டிருந்த நிலையில், போராட்டம் தொடங்குவதற்கு முன்பே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளான உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சென்னைக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், போலீசார் அவர்களை கோட்டை நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை. உழைப்பாளர் சிலை அருகே திரண்ட மாற்றுத்திறனாளிகளை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்திற்கு முன்பே மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!