by Vignesh Perumal on | 2025-04-22 10:28 AM
கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும். அதேபோல், எம் சாண்ட் விலை ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் விலை ரூ.7 ஆயிரமாகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறையின் அனுமதிச் சீட்டு விலை உயர்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமானப் பணிகளின் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!