by Vignesh Perumal on | 2025-04-22 10:28 AM
கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும். அதேபோல், எம் சாண்ட் விலை ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் விலை ரூ.7 ஆயிரமாகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறையின் அனுமதிச் சீட்டு விலை உயர்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமானப் பணிகளின் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !