by Vignesh Perumal on | 2025-04-22 10:28 AM
கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும். அதேபோல், எம் சாண்ட் விலை ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் விலை ரூ.7 ஆயிரமாகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறையின் அனுமதிச் சீட்டு விலை உயர்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமானப் பணிகளின் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!