by Muthukamatchi on | 2025-04-21 09:53 PM
மது கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு பொதுமக்கள் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். சட்டவிரோத போதை விற்பனை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியைகஞ்சா இல்லாத நகரமாக உருவாக்க நகர போலீசார் கடும் முயற்சியில் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் இந்த தீவிர முயற்சிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாகபழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தன ஜெயன் தலைமையில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் உத்தரவின் படி பழனி நகர சார்பு ஆய்வாளர் விஜய் அவர்கள் தீவிர ரோந்து பணியில் மற்றும் கஞ்சா இல்லா பழனியாக மாற்ற முயற்சித்து வரும் பழனி நகர காவல் சார்பு ஆய்வாளர் விஜய் அவர்கள் கடும் முயற்சியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை ஒரே நேரத்தில் பதுங்கி இருந்து அதிரடியாக கைது செய்தனர்.போலீசாரில் இந்த அதிரடி நடவடிக்கை எவிடன்ஸ் குழுமம் சார்பில் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் பழனி நகர ஆய்வாளர்களுக்கும் மற்றும் காவலர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!