| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

இனி 4 முக்கிய சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் கட்டாயம்...! மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு.....!

by Vignesh Perumal on | 2025-04-21 09:00 PM

Share:


இனி 4 முக்கிய சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் கட்டாயம்...! மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு.....!

நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்கள் நுழைய இனி 4 முக்கிய சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் கட்டாயமாக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை மாவட்ட எல்லைகளில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, நாளை (ஏப்ரல் 22, 2025) முதல் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி மற்றும் மேல் கூடலூர் ஆகிய 4 முக்கிய சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் சரிபார்க்கும் நடைமுறை நீக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்றும், இந்த 4 சோதனைச் சாவடிகளில் மட்டுமே அவை சரிபார்க்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment