by Vignesh Perumal on | 2025-04-21 08:46 PM
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினரை உடனடியாக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காவலர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் சாலை விதிகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் காவல்துறையினரே விதிகளை மீறுவது ஏற்புடையது அல்ல என்று டிஜிபி சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், காவல்துறையினர் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இந்த விதிமீறலில் ஈடுபடும் காவலர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்ற புகார்கள் வரும் காவலர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினர் சட்டத்தை மதித்து நடப்பதன் மூலமே பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற முடியும் என்றும், விதிகளை மீறும் காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபியின் இந்த அதிரடி நடவடிக்கை, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!