| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

மக்களே எச்சரிக்கை....! இதுதான் புது கள்ளநோட்டு...! மத்திய அரசு தகவல்....!

by Vignesh Perumal on | 2025-04-21 08:35 PM

Share:


மக்களே எச்சரிக்கை....! இதுதான் புது கள்ளநோட்டு...! மத்திய அரசு தகவல்....!

புது வகையான ₹500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கள்ள நோட்டுகள் அசல் ₹500 நோட்டுகளைப் போலவே தரம் மற்றும் அச்சில் மிகச் சிறப்பாக உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எளிதில் ஏமாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய வகை கள்ள நோட்டுகளில் "RESERVE BANK OF INDIA" என்ற வார்த்தையில் உள்ள "E" என்ற எழுத்துக்கு பதிலாக "A" என்ற எழுத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த சிறிய எழுத்துப்பிழையை வைத்து கள்ள நோட்டுகளை அடையாளம் காண முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த கள்ள நோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, வங்கிகள், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளிட்ட அமைப்புகள் தீவிரமாக கண்காணிக்கவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் விழிப்புடன் இருக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ₹500 நோட்டுகளையும் பரிசோதிக்கும்போது, குறிப்பாக "RESERVE BANK OF INDIA" என்ற வார்த்தையை கவனமாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நோட்டுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் பெறும் ₹500 நோட்டுகளை கவனமாக பரிசோதித்து, ஏமாற்றப்படுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment