by Vignesh Perumal on | 2025-04-21 04:12 PM
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக ₹2,000 லஞ்சம் வாங்கிய இளநிலை மின்பொறியாளர் அம்பேத்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. சத்தியராஜ் அவர்களுக்கு மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சேத்தியாதோப்பில் காத்திருந்தனர். அப்போது, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவரிடம் இருந்து இளநிலை மின்பொறியாளர் அம்பேத்கர் லஞ்சமாக ₹2,000 பெற்றபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அம்பேத்கர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்றும், லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!