| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

ஆதரவின்றி சுற்றித் திரிந்த மூதாட்டி....! காவலர் செய்த செயல்....! காவலருக்கு குவியும் பாராட்டு....!

by Vignesh Perumal on | 2025-04-21 03:50 PM

Share:


ஆதரவின்றி சுற்றித் திரிந்த மூதாட்டி....! காவலர் செய்த செயல்....! காவலருக்கு குவியும் பாராட்டு....!

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான போலீசார், திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆதரவின்றி சுற்றித் திரிந்த 60 வயது மூதாட்டி ஒருவரை மீட்டனர்.

அத்திக்கோம்பையைச் சேர்ந்த முருகேசனின் மனைவி மாயக்காள் என்பவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரைப் பாதுகாப்பாக மீட்டு, திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள நகர்ப்புற வீடற்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment