by Satheesh on | 2025-04-21 03:28 PM
கத்தோலிக திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது(88).உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், ரோம் நேரப்படி காலை 7:35 மணிக்கு உயிரிழந்தார். பிப்.14இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் 38 நாட்களுக்கு பின் வீடு திரும்பியிருந்தார்.ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கியிருந்தார் போப் பிரான்சிஸ்.தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்தான். 2013 மார்ச் 13இல் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்தார். போர்களை முடிவுக்கு கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியவர் போப் பிரான்சிஸ் ஆவார்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!