by aadhavan on | 2025-04-20 01:06 PM
சி.எம்.ஆதவன்
மதுரை கோவில் கோவில்பாப்பாகுடி கிராமத்தில் வட மஞ்சுவிரட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.
கோவில்பாப்பாகுடி உச்சி மாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வட மஞ்சுவிரட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் ஒன்பது பேர் அடங்கிய வாலிபர்கள் குழு காளைகளை அடக்கியது.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வட மஞ்சுவிரட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு காளையும் 20 நிமிடங்கள் களத்தில் இருக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் களத்தில் இருக்கும் ஒன்பது வீரர்கள் காளையினை அடக்க வேண்டும். இதுவே மஞ்சுவிரட்டு போட்டி.
பாரம்பரியமாக பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போட்டிகளை காண, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். தேனி சிவகங்கை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வந்து போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன.
காயமடைந்த 6க்கும் மேற்பட்ட வீரர்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அலங்காநல்லூர் காவல் சரக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!