by admin on | 2025-01-29 07:17 PM
கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீடுகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. “கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ல் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.