by Satheesh on | 2025-04-18 02:46 PM
நெல்லை : ஓய்வுப்பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது. முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த மார்ச் 18ம் தேதி அதிகாலை தொழுகைக்கு சென்று திரும்பிய போது ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நூருனிஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.