| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பெண்களே உஷார்...! நகை பறிப்பு...! போலீசார் அதிரடி கைது...! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-04-18 10:26 AM

Share:


பெண்களே உஷார்...! நகை பறிப்பு...! போலீசார் அதிரடி கைது...! குவியும் பாராட்டுக்கள்...!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெண்ணிடம் 6 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது 55) என்பவர் நேற்று நவமரத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் வழி கேட்பது போல் பேசி உள்ளனர். திடீரென அவர்கள் பாப்பாத்தி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாப்பாத்தி உடனடியாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) பவித்ரா அவர்களின் மேற்பார்வையில், வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை நடத்தியது.

விசாரணையின் முடிவில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி கோணப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 45) மற்றும் சாணார்பட்டி கொசவபட்டியைச் சேர்ந்த அருமைராஜ் (வயது 45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 6 பவுன் தங்க சங்கிலியை போலீசார் மீட்டனர். தற்போது கைதான நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெண்மணியிடம் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை விரைவாக கைது செய்து நகையை மீட்ட வேடசந்தூர் போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment