by admin on | 2025-01-29 03:51 PM
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக ராஜேந்திரன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றார். தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிசிடிவி பொருத்த வேண்டிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வரும் ஆணையர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது ஏராளமான பார்வையாளர்கள் தொடர்ந்து வந்து செல்லும் நிலையில் உள்ளே நோயாளிகள் வரும் வழி வெளியே செல்லும் வழி பச்சிளம் குழந்தைகள் பிரிவு மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றி பார்த்து காவலர் அறையில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசனிடம் கேட்டறிந்தார்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!