| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் சொத்து வரி செலுத்தாத ஏழு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

by admin on | 2025-01-29 01:01 PM

Share:


திண்டுக்கல்லில் சொத்து வரி செலுத்தாத ஏழு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

திண்டுக்கல்லில் சொத்துவரி செலுத்தாத 7 தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வரி வசூல் பணி நடந்து வருகிறது. இதற்காக 16 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாத கடைகள், நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கும்படி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இந்நிலையில்

வரி செலுத்தாத மவுன்ஸ்புரம் 5-வது தெரு, நந்தவனம் ரோடு, கிழக்கு கோவிந்தபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 7 வணிக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தாடிக்கொம்பு ரோட்டில் ரூ.10 லட்சம் செலுத்தாத காலிமனை கையகப்படுத்தப்பட்டது. மேலும் வரி செலுத்தாத ஒரு சினிமா தியேட்டருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment