by admin on | 2025-01-29 12:59 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஜெயமங்களம் வடுகபட்டி கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் மேல்மங்கலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இன்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விழாவில் அதிகாரிகள் முன்னிலையில் திமுக ஒன்றிய துணை செயலாளர் என் பாஸ்கர அய்யன் மற்றும் விவசாய சங்க முன்னோடிகள் கலந்து கொண்டனர்.