by Vignesh Perumal on | 2025-04-15 03:43 PM
அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 15, 2025) அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி, அதிமுகவினர் செருப்பால் அடித்தும் ஆவேசமாக கோஷமிட்டனர்.
அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை அதிமுகவினர் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், கோஷமிட்டும் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் கோஷமிட்டனர். அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர்.
அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவரது பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுகவினர், அவர் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைன்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!