by Vignesh Perumal on | 2025-04-15 02:39 PM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக செயற்குழுக் கூட்டம் மே 2ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழுக் கூட்டம் மே மாதம் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள், கூட்டணி நிலவரம், மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!