by Vignesh Perumal on | 2025-04-14 06:04 PM
திண்டுக்கல் மாவட்டம் நரசிங்கபுரம், மாதாமலை நகர் பகுதியைச் சேர்ந்த அவங்க யூஜின் (வயது 24) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு யூஜினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூஜின் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.