by Vignesh Perumal on | 2025-04-14 05:07 PM
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் இன்று (ஏப்ரல் 14, 2025) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மருத்துவர் ராமதாஸின் முடிவை விமர்சித்த திலகபாமா பாமகவிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வடிவேல் ராவணன் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். "திலகபாமா நேற்றுதான் கட்சிக்கு வந்தவர். பாமகவின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி போன்றவர்" என்று சாடியுள்ளார்.
மேலும் அவர், "பாமக நடத்திய போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என எந்தவொரு கட்சி நிகழ்ச்சியிலும் திலகபாமா கலந்து கொண்டதில்லை. கட்சியின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அவருக்கு எந்த புரிதலும் இல்லை. மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கட்சியின் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் எடுக்கின்ற முடிவுகளை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
வடிவேல் ராவணன் தனது அறிக்கையின் முடிவில், "திலகபாமா உடனடியாக கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி அவரை நீக்குவது குறித்து முடிவெடுக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திலகபாமா சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்ற அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் விளைவாகவே வடிவேல் ராவணன் தற்போது இந்த கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் பாமகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!