| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

by admin on | 2025-01-28 12:32 PM

Share:


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர் 


திண்டுக்கல் அருகே அப்பனம்பட்டியை சேர்ந்த அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை ஏற்பட்டது.

குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். பரிசோதித்த கண்பார்வை பிரிவு டாக்டர்கள் லென்ஸ் பொருத்தலாமா என ஆலோசித்தனர். 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் பொருத்தமுடியும் என்பதால் முதலில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர்.

இதை தொடர்ந்து குழந்தைக்கு கண் பார்வை கிடைத்தது. 1 மாதம் பின் இடது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். இரு ஆண்டுக்கு பின் லென்ஸ் பொருத்த திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை குழுவில் உள்ள டாக்டர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.


போட்டோ செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment