by Vignesh Perumal on | 2025-04-14 08:15 AM
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி பன்றிமலை ரோட்டில் அமைதிச்சோலை அருகே ஒரு உடல் தீப்பற்றி எரிவதை கண்ட கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற சிலர் கன்னிவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பாதி எரிந்த நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்ணிற்கு 22 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். பெண்ணின் உடல் பெருமளவு எரிந்த நிலையில் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார், இங்கு எப்படி வந்தார் என்பதை வழித்தட கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு விசாரணை நடக்கிறது. கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!