by Vignesh Perumal on | 2025-04-14 08:15 AM
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி பன்றிமலை ரோட்டில் அமைதிச்சோலை அருகே ஒரு உடல் தீப்பற்றி எரிவதை கண்ட கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற சிலர் கன்னிவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பாதி எரிந்த நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்ணிற்கு 22 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். பெண்ணின் உடல் பெருமளவு எரிந்த நிலையில் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார், இங்கு எப்படி வந்தார் என்பதை வழித்தட கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு விசாரணை நடக்கிறது. கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!