by admin on | 2025-01-28 12:22 PM
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ரூ.16 லட்சம் இருந்த பணப்பையை திருடிய பிரபல திருடர்கள் 3 மூன்று பேர் கைது*
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஆந்திராவை சேர்ந்த வீராஞ்சநெயலு(64) என்பவர் ரூ.16 லட்சம் பணம் கொண்ட பணப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுஇதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் நகர் குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் CCTV பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல திருடர்கள் பாண்டித்துரை(47), செல்வம்(54) மற்றும் அவரது மனைவி பிரியா(39) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
போட்டோ செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!