by Muthukamatchi on | 2025-04-12 01:28 PM
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு. "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது. ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு. கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
இவ்விருதிற்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01042024 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 3103.2025 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடம் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்). மத்திய, மாநிலஅரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். உள்ள மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடையோர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அனையத்தில் www.sdat.tn.gov.in www.sdat.tn.gov.in என்ற இனையதளத்தில் 03.05.2025 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருரஞ்ஜீத்சிங் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.