by Vignesh Perumal on | 2025-04-12 08:23 AM
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மார்ச் 9 ஆம் தேதி கொலை செய்த வழக்கில் திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த சுடலைமுத்து(26), குஜிலியம்பாறை அருகே அரசு பள்ளி கழிவறையில் சிறுமிகளை அலைபேசியில் ஆபாசமாக போட்டோ எடுத்த வழக்கில் செந்தில்குமார்(35), ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக போக்சோவில் நாகப்பன்பட்டி காலனியைச் சேர்ந்த ரினித்குமார்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன், 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து மூவரும் குண்டர் சட்டதில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.