| | | | | | | | | | | | | | | | | | |
உலகம் உலகம்

நியூயார்க்...! ஹெலிகாப்டர் ஆற்றில் பாய்ந்தது...! காரணம் என்ன தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-11 09:42 AM

Share:


நியூயார்க்...! ஹெலிகாப்டர் ஆற்றில் பாய்ந்தது...! காரணம் என்ன தெரியுமா...?

நியூயார்க் நகரில் இன்று (ஏப்ரல் 10, 2025) பிற்பகல் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தானது ஹட்சன் ஆற்றில், லோயர் மன்ஹாட்டனுக்கு அருகில் நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பம் மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர்.

அந்தக் குடும்பத்தில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் இருந்ததாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். விமானியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் நடுவானில் உடைந்து தலைகீழாக ஆற்றில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. 

இது ஒரு சுற்றுலா ஹெலிகாப்டர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆற்றில் மூழ்கியிருந்த ஹெலிகாப்டரிலிருந்து உடல்களை மீட்டனர்.

இந்த சம்பவத்திற்கு நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment