by Vignesh Perumal on | 2025-04-10 09:03 PM
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏப்ரல் 19-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வால் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏப்ரல் 19-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!