| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பெண்ணிடம் தவறாக பேசிய எஸ்எஸ்ஐ...! டிஐஜி அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-04-10 09:33 AM

Share:


பெண்ணிடம் தவறாக பேசிய எஸ்எஸ்ஐ...! டிஐஜி அதிரடி உத்தரவு...!

பெண்ணிடம் அவமரியாதையாக பேசிய எஸ்.எஸ்.ஐ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், மகளிர் போலீஸாருக்கு ஓபன் மைக்கில் டி.ஐ.ஜி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்ணிடம் தொலைபேசியில் அவமரியாதையாக பேசியதாக கூறப்படும் பெண் எஸ்.எஸ்.ஐ. ஒருவரை டி.ஐ.ஜி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், அனைத்து மகளிர் போலீஸாரையும் ஓபன் மைக்கில் எச்சரித்துள்ளார்.

சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்த பெண்ணிடம் எஸ்.எஸ்.ஐ. சுமதி என்பவர் முறையற்ற விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், எஸ்.எஸ்.ஐ. சுமதி பெண்ணிடம் அவமரியாதையாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் உடனடியாக எஸ்.எஸ்.ஐ. சுமதியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

மேலும், இதுகுறித்து பேசிய டி.ஐ.ஜி. வருண்குமார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பணியாற்றும் போலீசார் புகார்தாரர்களிடம் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.ஐ.ஜி.யின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment