by Vignesh Perumal on | 2025-04-10 08:59 AM
பழனியில் பங்குனி உத்திர திருவிழா 5ம் நாளை முன்னிட்டு, யானை வாகனத்தில் முத்துக்குமாரசாமி வீதி உலா. வள்ளி தெய்வானை உடன் வந்தனர். அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அதாவது, பழனியில் பங்குனி உத்திர திருவிழாவின் 5ம் நாளான நேற்று (ஏப்ரல் 9, 2025), முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை மறுநாள் (ஏப்ரல் 11) நடைபெற உள்ளது.
தேரோட்டம் ஏப்ரல் 12ம் தேதி மாலை நடைபெறும். விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
நேற்று 5ம் நாள் என்பதால், முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!