| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

நாளை பழனியில் முக்கிய நிகழ்ச்சி...! பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு...!

by Vignesh Perumal on | 2025-04-09 04:13 PM

Share:


நாளை பழனியில் முக்கிய நிகழ்ச்சி...! பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10 ஆம் தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment