by Vignesh Perumal on | 2025-04-09 07:36 AM
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(93) காலமானார்
மூத்த காங்கிரஸ் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (வயது 93) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். காந்தியவாதியான இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், நாகர்கோவில் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.