by admin on | 2025-01-25 10:01 PM
தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுளம் நகர திமுக மற்றும் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாகமொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார், மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டியன், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். எம் பாண்டியன், பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ் பி டி ஸ்டீபன் வரவேற்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்புரை ஆற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,குவாஞ்சிநாதன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம், போடி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் நேருபாண்டியன் ஆகியோர் பேசினர்.
பெரியகுளம் நகர துணைச் செயலாளர்கள் சரவணன் . சேதுராமன்,வாசுவின் பொருளாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டி செந்தில்குமார் மாநில மீனவர் நல வாரிய குழு உறுப்பினர் குள்ளபுரம் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.