by Vignesh Perumal on | 2025-04-08 10:38 AM
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்று (ஏப்ரல் 8, 2025) சட்டப்பேரவைக்கு வந்தனர்.
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குகின்றனர். ஜனநாயக முறைப்படி எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்னையை எழுப்ப அதிமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்று சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!